
அமைதியாய் ஒரே திசைபார்த்து
அமைந்த நேரம் விசைவிடுத்து
காற்றை வகிடெடுத்து
இலக்கை இல்லாமல் அழிக்க
விரைகிறது தோட்டா ஒன்று
குறிவைக்கப் படுவதைக் குறித்து
கவனிக்கப் படுவதைக் கணித்து
கடைசி நொடிவரையில் காத்திருந்து
கம்பியிலிருந்து துள்ளியெழுந்து
காற்றில் கலக்கிறது சிட்டு ஒன்று
பட்டுத்
தெறிக்கிறது தோட்டா....
துண்டாகித்
துடிக்கிறது கம்பி......
இன்னமும் அதிர்வு அடங்கவில்லை
அந்தக் கம்பியில்...
எனக்குள்ளும் ....!
நன்றி :கரு:யாழி
1 comment:
konnutteeeenga naan kambiyai sonnean
Post a Comment