Wednesday, August 25, 2010

கனவுகளைப் பற்றிய கனவுகள் ..


கண்கள் மூடியவுடன்
கணக்கில்லாமல் விரைந்து வரும்
அற்புதக் கனவுகளைப் பற்றி
கண் இமைக்காமல்
விவரித்துக் கொண்டிருக்கிறாள் அவள்...

கண்கள் விரிய
கவனமாகக் கேட்டு
ரசித்துக் கொண்டிருக்கிறோம்

கனவுகளைப் பற்றிய கனவுகளோடு....

கண்கள் மூடும் சாத்தியமில்லாத
அந்த கண்ணாடித் தொட்டி மீன்களும்

நானும்...........

.( நன்றி :கரு ;யாழி/பண்புடன்)

No comments: