Sunday, August 29, 2010

அசையாமல் இருக்கிறாள் அவள்.....!


அப்போதிருந்தே
குத்துக்காலிட்டு அசையாமல்
அமர்ந்திருக்கிறாள் அவள்

கால்களை மடக்கி
கைகளால் இறுக்கி
முகத்தினை மொத்தமாய்
இடுக்கினுள் புதைத்து
அசையால் இருப்பது
போலத்தான் தோன்றுகிறது

ஆனால்.....

இணைந்திருந்த பாதங்களில்
மெல்ல அசைந்து கொண்டிருக்கிறது
ஒரு பெருவிரல் மட்டும்

கோர்த்திருந்த கைகளின்
நடுவில் சிக்கிய காற்று
மூச்சுவிட முடியாமல்
திணறியபடியே வெளியேற
முயன்று கொண்டிருக்கிறது
அதனால் முடிந்த மட்டும்

அழுந்த மூடியிருந்த
இமைகளுக்குள் இடவலமாய்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
கருவிழிகள் இரண்டும்

திடீரென உருவாகி
காய்ந்துபோன தடத்தில்
உருண்டு பயணித்து
உதடுகளைத் தாண்டி
தொடைகளில் வழிந்து
தரையில் மோதி
சிதறித் தெறிக்கிறது
கண்ணீர்த் துளிகள் இரண்டு ....

என்னதான் நினைத்திருப்பாள் அவள் ?


.

No comments: