Tuesday, August 24, 2010

கிடைத்துவிடுமா எனக்கு.......?


சுழற்றியடிக்கும் சூறாவளியில்
சிக்கிக்கொண்ட நீர்க்குமிழிகளாய்
என்னைச் சுற்றிலும் பறந்தபடியே
இருக்கின்றன எனது
கடந்த கால நினைவுகள்.......

அதோ
உயரே தொலைவில்
என்னிலிருந்து விலகி
பறந்து கொண்டிருக்கும்
அந்த குமிழிக்குள்
எனது விலை மதிப்பில்லா
குழந்தைப் பருவ நினைவுகள் .....

உடையும்முன் அடையும்
வழியேதும் உண்டா ?

உடைந்துபோய்
இங்கே நான் .......

No comments: