Tuesday, August 31, 2010

வழியா இல்லை வாழ்வதற்கு ...!


இருளைவிட வேகமாய்
சூழ்ந்தது கருமேகம் ..
இருப்பதை எல்லாம்
சுழற்றியடித்தது சூறாவளி..
கட்டுக்குள் வராமல்
கடுமையானது பேய்மழை..
கட்டவிழ்த்து விட்டதுபோல்
கரைபுரண்டது காட்டாற்று வெள்ளம்..

எல்லாம்
முடிந்த பின்னர்

அதிகாலை இருளை
வேகமாய் விரட்டியபடி
வெளியே வருகிறது சூரியன்....

கரையில்
வேரடி மண்ணோடு
தரையில் வீழ்ந்திருந்தன
அறுபதடி மரங்கள்....

அருகில்
தலையின் மேலிருந்த
சின்னஞ்சிறு நீர்த்துளி
வெயிலில் உருகிக் கலைய

தலை நிமிரத் தொடங்குகின்றன
ஆறங்குலப் புற்கள் ............
.

1 comment:

நிலாமதி said...

புயலுக்கு பின் ஒரு அமைதி. துன்பத்துக்கு பின் ஒரு இன்பம் நம்பிக்கை தான் வாழ்க்கை.
வாழ்ந்து பார்ப்போம். நம்பிக்கையோடு. ..............