Sunday, September 21, 2008

என் ஜன்னல் வழியே..



அதிகாலைப் பயணம்.
ஜன்னலுக்கு வெளியே
வெகு தூரத்தில்
புள்ளியாய் கையசைக்கும்
குட்டிக் குழந்தைகள்.

நொடிப்பொழுதில் நானும்
குழந்தையாய் மாறி,
எழுந்து நின்று,
கையசைக்க நினைத்து,

சுற்றம் பார்த்து,
முற்றும் உறைந்து,
பார்வையையே பதிலாக்கி
உள்ளே சகலமும்

முடங்கிப் போன
நான்

No comments: