Sunday, September 21, 2008

விதையின் பயணக் குறிப்பு.


விதையாய் தரை புகுந்து
தளிராய் தலை நிமிர்ந்து
கோடையில் கருகாமல்
வாடையில் மருகாமல்

கொத்து கொத்தாய்
கதிர் பிடித்து
அறுவடையில் உதிராமல்
கட்டு கட்டாய்
களம் புகுந்து
போரடிக்கையில்சிதறாமல்

வியாபாரத்தளம் கண்டு
உன் வீடு அடைக்கலம் கொண்டு
சோறாகி இலைக்கு வந்து
பிறவிப் பயன் அடைய இருக்கையில்

மிச்சமாகி
குப்பைக்குப் போனது
அந்த அரிசி

No comments: