Wednesday, July 29, 2009

விளக்கேற்றிய நண்பனுக்கு.....


வீட்டின் முகப்பில்
வரவேற்பு அறையில்
ஒருபுறம் எனது திருமணப்படம்.,
மறுபுறம் அவனது திருஉருவப்படம்.

'எனது உயிர் நண்பனவன்
என்னுடன் இருக்கும் வரையில்
எனக்கொரு கவலை இல்லை
இனியொரு உவலை இல்லை


கானல்வரியாய் தெரிந்த என்கனவை
நாணல்திரியாய் எரிந்த என்நினைவை
நிழலாய் மாறஇருந்த என்வாழ்வை
நிஜமாய் மாற்றிக் காட்டியவன் அவன்

மொய் எழுதி வாழ்த்தி விட்டு
பொய் முகத்தோடு ஏக்கம் சுமந்து
திரும்பும் எனக்கும் வாழ்க்கையில்
திருமணம் என்ற ஒன்றைத்
திருவிழாவாக நடத்தியவனுக்கு
என் வாழ்நநாள் முழுதும்
நன்றிக் கடன் பட்டிருப்பேன்

அன்று
பெண்பார்க்கும் படலத்தில்
மணமகனின் நண்பனாய்
மிக நெருக்கத்தில் அவன்

"மாப்பிள்ளை கருப்புதான்,
....ஆனாலும் பரவாயில்லை"

"மாப்பிள்ளை குட்டைதான்,
....ஆனலும் மட்டம் இல்லை"

"மாப்பிள்ளை ஒல்லிதான்,
....ஆனாலும் பல்லிபோல இலலை"

"சுறுசுறுப்பு கம்மிதான்,
....ஆனலும் துருதுருப்புதான்"

"பல்லு ரெண்டும் எடுப்புதான்
....ஆனாலும் பளபளப்புதான்"

அருகில் அவனும் சொங்கிபோல
....தூங்கிக் கொண்டே இருந்தான்
அதனால் நானும் - அங்கே
....தூக்கலாகவேத் தெரிந்தேன்

எந்த வில்லங்கமும் இன்றியே
எல்லா விவகாரமும் முடிந்ததினிதே'


பெருமையோடு நண்பன் அவனுக்கு
உரிமையோடு வணக்கம் வைக்கிறேன்.

1 comment:

தேவன் மாயம் said...

நண்பனைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கீங்க!!