Tuesday, August 25, 2009

நட்சத்திர உணவக விருந்து முடிந்து.....!


கடைசியில் ஆரம்பமாகியிட்டது
காத்திருந்த விருந்து

*காளான் சூப்
*கோழி பிரியாணி
*ஃப்ரைடு ரைஸ்
*மட்டன் மஞ்சூரியன்
*சிலோன் பரோட்டா
*பட்டர் நான்
*கிரில் சிக்கன்
*பட்டர் சிக்கன்
*தந்தூரி சிக்கன்
*ப்ரான் ஃப்ரை
*க்ராப் மாசால்
*சீஸ் பீசா
*எக் சாண்ட்விச்
*மிக்ஸ்டு பர்கர்
*புல்ஸ் ஐ
*இன்னும் .........
பெயரிடப்படாத
பல வகைகள்....
*ஆம்ப்லெட்டுடன்
*ஐஸ்க்ரீம் ......................( ஆங்கிலம்/வழியில்லை/மன்னிக்கவும் :)

நட்சத்திர உணவகம் என்றாலே
நடைமுறையில் இதுதான் சிக்கல் !
எல்லாம் வந்து சேரும்வரை
எதையும் மனதாலும் தொடமுடியாது !!

நாசுக்காய் ஊர்மெச்ச
நாக்கால் மட்டும் சுவைத்து.....
மொத்தமாய் வந்தது
அத்தனையும் மிச்சம் வைத்து ....
......................?!?!?!?!?!?!?

” கரண்டியால சாப்பிட்ட பின்ன்னால
கையக்கழுவி வாயத் தொடைக்க

கடைசியில வரும் பாரு !
குளுகுளு எலுமிச்சை சாறு !!
கெடைச்சா அடிக்குமே ஜோரு !!!
குடிச்சா அதுதானே பேறு !!!!

பொறவாசலப் பாத்தே உக்காந்திருக்கோமே நாங்க !
பொசுக்குன்னு வாச்சுமேனு வந்திருவானே இங்க !!

எப்பத்தான் சாப்பிட்டு முடிப்பாங்க அங்க ?
எவ்வளவு நேரமாத்தான் காத்திருக்கோம் போங்க ?? “

2 comments:

Jerry Eshananda said...

வாழ்க ஜனநாயகம், மற்றும் பணநாயகம்.

தேவன் மாயம் said...

ஆழமான கருத்து நண்பரே!!ஓட்டும் பொட்டாச்சு!!