Wednesday, August 26, 2009

திரும்பி வருவேன் ........!


நீருக்கு ஏற்ப வளைந்துபின்
நிமிர்ந்து நிற்கும் நாணலே...

உன்னைப்போல நானல்ல !

வளைவதாலேயே நானிங்கு
வீழ்ந்து போகிறேன் நாணலே...

உன்னைப்போல நானல்ல !

விறைத்து நிற்பாய் நானென்றே
வில்லில் பூட்டிய நாணே...

உன்னைப்போல நானல்ல !

நிமிர்ந்து நின்றால் தானே - இன்று
உதிர்ந்து மறைவேன் நானே...

உன்னைப்போல நானல்ல !

காலமது கூடுமே - அதுவரை
காத்திருப்பேன் நானுமே !

ஒருநாள் நானாவேன்...

திமிரும் நாணாவேன்...!
நிமிரும் நாணலாவேன்...!!

திலகம்சூட்டி வருவேன் நானுமே - அன்று
முகம்பொத்தி உலகமே நாணுமே !

1 comment:

Unknown said...

உங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்