Sunday, September 13, 2009

இடிவந்து தாக்கியது போல...!


மந்திரிச்சுவிட்டக் கோழிபோல் நான்
எந்திரிச்சு உன்னிடம் வந்திருக்கிறேன்

கோவில்முரட்டுக் காளைபோல நான்
காதல் சொல்ல வந்துநிற்கிறேன்

’’மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


மற்றவன் பார்வைக்கு எப்போதும்நீ
அரைக்கிழவியாய் இருந்தாலும்

உற்றவன் எனக்கு இப்போதும்நீ
பேரழகியாகத்தான் தெரிகிறாய் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


ஏதோ ஒருகணத்தில் மட்டும்நீ
ராட்சசியாகத் தெரிந்தாலும்

எல்லாக் கோணத்திலும் எனக்குநீ
ரட்சகியாகவே இருக்கிறாய் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


அஞ்சுகமே உனை எந்தன்
மஞ்சத்தில் வைத்திருப்பேன் !

வஞ்சகமின்றி நானும் உந்தன்
நெஞ்சத்தில் வாழ்ந்திருப்பேன் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


குறிவைத்து என் இதயமதை
பறித்து விட்டாயே திருடி !

பறிகொடுத்த வெற்று இடமதை
இறகால்தடவி விடுவாயா வருடி !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !!


சரியென்று வந்தபின்னே நீ
சொன்னதெல்லாம் ஒத்துப்போவேன் !

சரியாக வில்லையெனில் நான்
சொல்லாமலேயே செத்துப்போவேன் !

மறுத்துவிடாதே என்கண்ணே !
மூர்ச்சையாகிவிடுவேன் உன்முன்னே !! ‘’



நேருக்கு நேர் பார்க்கிறேன்.....
நெஞ்சை நிமிர்த்தி கேட்கிறேன்......

”காதலிக்கிறேன் உன்னை !” என்கிறேன்

கைநீட்டினாலும் எட்டாத தூரத்தில்
கைகட்டித் தயாராய் (!) நிற்கிறேன்

”ஆமாம் நானும் !!” என்றாள்

உலகமே இருண்டது முன்னே !
உள்ளபடியே மூர்ச்சையானேன் அண்ணே !!




.

No comments: