Thursday, September 17, 2009

பொய் X பொய் = மெய் = நான்


கண்ணால் காண்பதும் பொய் !

ஆம்....! இது பொய் !

கல்லுடைக்கிறேனா? - நான்
கல்லுடைக்கிறேனா மலையில்?

நன்றாகப் பாரும்...

உடைத்துக்கொண்டிருக்கிறேன் மலையை !
சிதைத்துக்கொண்டிருக்கிறேன் அதன் நிலையை !!

காதால் கேட்ப்பதும் பொய் !!


ஆம்...! இதுவும் பொய் !!

மணலுக்குள் எனைப் புதைத்துவிட்டதாய்
மாட்சிமைப் பேசித் திரிவோரே ....

இதையும் கேளும் ....

கவிழும் மணலுக்காகவே - நான்
காத்திருக்கும் விதையாவேன்

மூழ்கியபின் ஊடுருவுவேன் - நான்
ஆழமாய் வேர்விடுவேன்

வீரியமாய் வள்ர்வேன் - நான்
விருட்சமாய் விரிவேன்

தீர விசாரிப்பதே மெய் !!!

ஆம் !....


தீயினில் விழுந்த அங்கமல்ல - நான்
தீயினில் பழுத்த தங்கம்

இருவிழியில் நெருப்பை உமிழ்வேன் - நான்
எரிகுழம்பின் இருப்பை இகழ்வேன்

ஒருநாள்......

தீயிலிருந்தே விளைந்து வருவேன் - நான்
தீயினிற்கே விருந்தும் தருவேன்

No comments: