Wednesday, July 28, 2010

உண்மை உரை(றை)க்கும்.......!


எல்லாம் முடிந்து சிதையில்
எரிந்து கொண்டிருக்கிறது
ஒரு உடல்

சுற்றிலும்
குளமாய் நிறைந்து
தளும்புகின்றன கண்கள்

புகையாய் மண்டும்
நினைவுகளால் சில....

மண்டிச் சூழும்
புகையால் பல.......
.

1 comment:

அ.முத்து பிரகாஷ் said...

உண்மை தான் தோழர் ...
நானும் பல முறை அவதானித்திருக்கிறேன்...
கசக்கும் உண்மை ...