Thursday, July 29, 2010

கனவு,இலக்கு,வெற்றி.........!


கனவுகளை மொத்தமாய்
கனரக வாகனத்துள்
கடுகளவும் இடையின்றி
கட்டி அடைத்துக்கொண்டு..
திட்டங்களை அணைத்துக்கொண்டு...
எட்டியிருக்கும் இலக்கினை
அடைந்துவிடும் வேகத்தில்
பளபளக்கும் சாலையில்
புலியின் பாய்ச்சலில் நான் .....

ஒற்றையடிப் பாதையில்
ஒரே ஒரு சுமையைத் தூக்கி
எனக்குப் பின்னால்
நடக்கத் தொடங்கியவர்கள்
ஏற்கனவே தொட்டிருந்தார்கள்
வெற்றியின் கோட்டை.
.

2 comments:

நிலாமதி said...

நடக்கத் தொடங்கியவர்கள்
ஏற்கனவே தொட்டிருந்தார்கள்
வெற்றியின் கோட்டை..................


very good

VELU.G said...

மிகவும் அருமை

ரசித்தேன்