Monday, August 9, 2010

நகல்தானே நீயும் ......!


நிறைவேறாத ஆசைகளை அம்மாவும்
நெடுங்காலக் கனவுகளை அப்பாவும்
அவரவர் விருப்பங்களை ஆசிரியரும்

பிறழாமல் பிரதியெடுத்து

அவன்

முதுகில் மிதித்தேறி
மொத்தமும் சிதறாமல்
விதைத்து வைக்கின்றனர்

மூளைக்குள் குழிதோண்டி
மூலைகூட விடாமல்
புதைத்து வைக்கின்றனர்

நெருக்கமாய் சூழ்ந்திருக்கும்
நகல்களின்
இறுக்கும் நெறுக்கத்தில்
கருவிலேயே
உருவாக முடியாமல்

நொறுங்கிப் போகிறது
ஒரு சுயம்..............

.

2 comments:

தேவன் மாயம் said...

நொறுங்கிப் போகிறது
ஒரு சுயம்....

உங்கள் ஆதங்கம் வரிகளில் தெரிகிறது!!

தேவன் மாயம் said...

நொறுங்கிப் போகிறது
ஒரு சுயம்....

உங்கள் ஆதங்கம் வரிகளில் தெரிகிறது!!