Saturday, September 4, 2010

பலி ஆடுகளும், ஆடு களமும்....


இவனிடமிருந்து கிளம்பி
அவன் முகத்தில் அறைகிறது
‘அந்த வார்த்தை’

அதிர்ந்து போகிறான் அவன்
‘ இவ்வளவு கடினமாய்
சொல்லி இருக்கக் கூடாது நீ’

உணர்ந்து கொள்கிறான் இவன்
‘அட ஆமாம். மிகவும்
கெட்ட வார்த்தைதான் அது”

கேட்டவன் சமாதானமாக
ஏவியவன் சமரசமாக
தோள்கோர்த்து கிளம்புகிறார்கள்.

அங்கே
பலியாடாக்கப் பட்ட ‘அந்த’
ஏவப்பட்ட வார்த்தை
அவமானப் பட்டு
காத்திருக்கத் தொடங்குகிறது

எங்கோ.. யாரோ
செய்யப் போகும்
அடுத்த ஏவலுக்கும்
அதைத் தொடரப் போகும்
கடுத்த அவமானத்திற்கும்.......


என்னைப் போலவே ....


.

No comments: