Tuesday, September 7, 2010

வீழ்வேன் என்று நினைத்தாயோ ?


இருள் சூழும் வேளையில்
குளிர் அணைக்கும் மாலையில்
வெம்மை படர்கிறது எனக்கு மட்டும்

ம்ம்ம்ம்.........

இங்கே மேடையில்
எரியூட்டப்படுகிறது எனது உடல்

நான் என்ற ’அது’....
நாளைக் காலையில்
சுடுகாட்டின் கூரையில் படர்ந்த
கரியின் கறையினைத் தவிர்த்து
கரைந்தே போயிருக்கும் உதிர்ந்து

ஆனாலும் ...
அவ்வளவு எளிதில் நான்
”வீழ்வேன் என்று நினைத்தாயோ ?”

இருந்த விதியைப்
புறந்தள்ளுவேன் நான்..
ஒரு புதிய விதியை
உருவாக்குவேன் நான்..

ஒன்றை இழந்து ,
இரண்டைக் கொடுத்து ,
இரண்டின் அழிவைத் தடுத்து
இரண்டோடு மூன்றாகித் தொடரப்போகிறேன்

அங்கே தயாராக
பதப்படுத்தப்பட்ட பேழையுள்
பாந்தமாய் இருக்கிறது என்இதயம்...

குளிரூட்டப்பட்ட குடுவையுள்
குளித்துக் கொண்டிருக்கிறது கண்கள்...

.

No comments: