Tuesday, February 1, 2011

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(9) பெருக்கல் ...ஈரிலக்க எண்கள்.. !

அன்பர்களுக்கு .......
முந்தைய பதிவை ஒரு முன்னோட்டமாகக் கொள்ளவும் ....
தொடரும் நடைமுறையை கவனமாக எடுத்துக் கொள்ளுங்கள் ....
வரப்போகும் பெரிய கணக்குகளுக்கு இதுதான் அடிப்படையாக இருக்கும்......

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(9)

இனம் சார்ந்த ஈரிலக்க எண்களின் பெருக்கல் .!

( எளிய [சார்ட் கட்] முறைக்கான அடிப்படை )

அ) 10 முதல் 19 வரை :


எ.கா 1): 12 x 13

முதல் எண்ணுடன்(12)..பெருக்கும் எண்ணின்

ஒற்றை இலக்க எண்ணைக்(3) கூட்டி ,

பத்திலக்க எண்ணால்(1) பெருக்கவும் ....................................= [12 + 03 ] x 1 = 15_

இரு எண்களின் ஒற்றை இலக்க எண்களைப் பெருக்கிவரும்

எண்ணின் பத்திலக்கத்தை , முதலில் வந்த எண்ணின்

ஒற்றை இலக்கத்திற்குக் கீழே அமைத்து......... ........................... = 02 x 03 = 06

கூட்டினால் வந்துவிடும் விடை........................................................................ = 156

இன்னும் விளக்கமாக :

maths 9 part 1.jpg

maths 9 part.jpg

(முக்கியக் குறிப்பு : வழக்கமாக விடைகாண...பெருக்கிவரும் முதலெண்ணுக்கு கீழே ..அடுத்த எண்ணை வலமிருந்து இடமாக ஒரிலக்கம் தள்ளி எழுதிக் கூட்டுவோம் .....

இனி வரும் எளியமுறை(சார்ட்க்கட்)முறைகளில் ..இடமிருந்து வலமாக ஒரிலக்கம் தள்ளி அமைத்துக் கூட்ட வேண்டும்..)


ஆ) 20 முதல் 29 வரை .!

எ.கா 1): 22 x 23

முதல் எண்ணுடன்(22)..பெருக்கும் எண்ணின்

ஒற்றை இலக்க எண்ணைக்(3) கூட்டி ,

பத்திலக்க எண்ணால்(2) பெருக்கவும் ......................................= [22 + 03 ] x 2 = 500

இரு எண்களின் ஒற்றை இலக்க எண்களைப் பெருக்கிவரும்

எண்ணின் பத்திலக்கத்தை , முதலில் வந்த எண்ணின்

ஒற்றை இலக்கத்திற்குக் கீழே அமைத்து.............................................= 02 x 03 = 06

கூட்டினால் வந்துவிடும் விடை.......................................... .................................= 506


இ) 30 முதல் 39 வரையிலான எண்களின் பெருக்கல் .!

மேற்கண்ட முதல்(ஸ்டெப்) நடைமுறையில் 2க்குப் பதிலாக 3 ஆல் பெருக்கிக் கொள்ளவும் ........


ஈ) 40 முதல் 49 வரைக்கும் 4 ஆலும் ...........

தொடர்ந்து...............

ஐ) 90 முதல் 99 வரைக்கும் 9 ஆலும் பெருக்கினால் போதும் .

அவ்வளவுதான் ..வாசிக்கும்போது கடினமாகத் தெரியலாம்...

இரண்டு முறை மனக்கணக்காகவே செய்துபாருங்களேன் ......மிகமிக எளிதாகிவிடும் ....

வாழ்த்துகள் ....:)


No comments: