
அந்நிய மண்ணில் திட்டமிட்டு
இந்தியாவை திடுக்கிட வைத்து
தீவிரவாதிகள் நடத்தி முடித்த
அதிதீவிரவாதத் தாக்குதல் அது
உயர் அதிகாரிகளை வரவழைத்து
உயிர்பறித்த தாக்குதல் அது
அப்பாவிப் பொதுமக்கள் மீதான
அடாவடி வெறித்தாக்குதல் அது
இதுவரை இந்தியா சந்தித்ததில்லை
இது போன்றதொரு தாக்குதலை
உலகமும் இதுவரை பார்த்திருக்கமுடியாது
இனி நடக்கப் போகும் வேடிக்கையை
கதாநாயகன்
கசாப்பை கூண்டிலடைத்து
வெற்றிகரமாய் தாண்டிவிட்டது
200 நாட்கள் மொத்தமாய்
200 உயிர்களை மொத்தமாய் இழந்தோம்
2000 வாழ்க்கை முழுமையாய் கேள்வியானது
100 கோடி மனம் தவித்துப்போய் நின்றது
கண்ணால் பார்த்த சாட்சிகள் உண்டு
காணொளித் தடயங்கள் உண்டு
களத்திலிருந்து உயிர்கொடுத்து
கைதுசெய்த காவலர்கள் உண்டு
உடனடி நீதிதான் 'அவர்களுக்கு'
உறுதியான செய்தி கொண்டு சேர்க்கும்
தாமதமாகும் தீர்ப்புகள் எல்லாம்
மறுக்கப்பட நீதிக்கு சமமாகிவிடும்
ஆனால் இங்கே நிகழ்வதென்ன ?
அங்கிருந்து 30 கேள்வி கேட்க்கிறார்கள் !
இங்கிருந்து 28 பதில் சொல்கிறார்கள் !!
தாக்கியவன் கேள்விகளை
தெனாவெட்டாய்க் கேட்க்கிறான்
அடிபட்டவன் பதில்களை
அடக்கமாய் சொல்லிகொண்டிருக்கிறான்
அதோ நீதிக்காக அவர்களும்
இதோ நீதிகாக்க இவர்களும்
இந்திய சட்டப் பிரிவுகளோடு
இங்கே தயாராக இருக்கிறார்கள்
நீதி மன்றக்காட்சிகள் இனி
தேதி தவறாமல் நடந்தேரும்
திட்டம் போட்டுத் தடுத்தாலும்
தலைமுறை பல கடந்தாலும்
சட்டம் கடமையை செய்தேதீரும்
ஆரம்பமாகிவிட்டது !
வக்கீல் அவனுக்காக
வாதாட வந்திருக்கிறார்
காப்பாற்றுவேன் கசாப்பை என்கிறார்
காப்பேன் தொழில்தர்மம் என்கிறார்
அவனைப் பச்சைக் குழந்தை என்கிறார்
பால்குடி மறக்கவில்லை என்கிறார்
வயதுக்கு வரவில்லை என்கிறார்
இந்தியாவின் நீதிமுறை பற்றியும்
இங்கேயுள்ள நடைமுறை பற்றியும்
அத்தனையும் முழுமையாக
அவனுக்குத் தெரிந்திருக்கிறது
இப்போதுதான் அவனும் ஆரம்பித்திருக்கிறான்
நான் சின்னப்பையன் என்கிறான்
சிறுவர் நீதிமன்றம் வேண்டும் என்கிறான்
குற்றப் பத்திரிக்கை முழுவதும்
பெற்றவள் மொழியில் வேண்டும் என்கிறான்
இனிமேல்தான் இன்னும் தொடருவான்
உள்ளே இருந்தே சட்டம் படிப்பான்
உடல் நலம் காட்டி மருத்துவமனை சேர்வான்
குளிர்சாதன வசதி கேட்ப்பான்
குளிக்க பன்னீர் கேட்ப்பான்
நீதிபதியை மாற்றச் சொல்வான்
அதிபரிடம் பேச அனுமதி கேட்ப்பான்
கருணைமனு கோரிக்கை வைப்பான்
காலம் கடந்துவிட்டதென நீதியும் கேட்ப்பான்
விலக்குகள் கேட்டுக்கொண்டே இருப்பான்
விளக்கங்கள் தந்துகொண்டே இருப்பார்கள்
வழககும் நடந்துகொண்டேதான் இருக்கும்
அதற்குள்
அடுத்த உலகக்கோப்பை தொடங்கி இருக்கும்
அடுத்த தேர்தல்வசூல் ஆரம்பமாகி இருக்கும்
அடுத்தடுத்து நாமும் பரபரப்பாகி இருப்போம்
வாழ்க சனநாயகம் !
வாழ்க் வாழ்க சனஞாபகம் !!
வாழ்க வாழ்க வாழ்க சனநாயகம் !
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க சனஞாபகம் !!