Thursday, May 28, 2009

காரணம் அவள்தான்..!


என்னிடம்
அதிகம் பேசுவாள்
ஆர்ப்பாட்டம் செய்வாள்

எடுத்தெறிந்து ஏசுவாள்
எதுசொன்னாலும் மீறுவாள்

வாயாடி எதிர்த்துநிற்பாள்
வாய்நிறைய பொய்யும்சொல்லுவாள்

தனக்கெல்லாம் தெரியுமென்பாள்
தான்சொன்னதுதான் சரியென்பாள்

ஆகையால் நான்
அவளால் பைத்தியமாய் இருக்கிறேன்


சாலையில்
தலைக்கவசம் இல்லாமல்
தலைதெறிக்கும் வேகம் காட்டுவாள்

அலைபேசியில் பேசிக்கொண்டே
அலட்சியமாய் வாகனம் ஓட்டுவாள்

தவறு முன்னால்நடந்தால்
தைரியமாய்த் தட்டிக்கேட்ப்பாள்

மாற்றுக் கருத்து எதையும்
ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள்

சுற்றத்தோரின் பேச்சை எல்லாம்
சற்றும் சட்டை செய்யமாட்டாள்

ஆகையால் நான்
அவளால் பைத்தியமாய் இருக்கிறேன்


இதைச் செய்யாதே என்றால்
அதைத்தான் முதலில் செய்வாள்

தனக்குத் தோன்றியதை
தவறென்றாலும் செய்து முடிப்பாள்

இப்படித்தான் இருக்கவேண்டுமென்றால்
இப்படியும் இருக்கலாம் என்பாள்


ஆகையால் நான்
அவளால் பைத்தியமாய் இருக்கிறேன்

ஆம் நான்
அவள்மேல் பைத்தியமாய் இருக்கிறேன்

3 comments:

தேவன் மாயம் said...

என்னிடம்
அதிகம் பேசுவாள்
ஆர்ப்பாட்டம் செய்வாள்

எடுத்தெறிந்து ஏசுவாள்
எதுசொன்னாலும் மீறுவாள்

வாயாடி எதிர்த்துநிற்பாள்
வாய்நிறைய பொய்யும்சொல்லுவாள்

தனக்கெல்லாம் தெரியுமென்பாள்
தான்சொன்னதுதான் சரியென்பாள்

ஆகையால் நான்
அவளால் பைத்தியமாய் இருக்கிறேன்
///

காதல் கிறுக்கா!! நடத்துஙக!!

தேவன் மாயம் said...

நேர்மையான பெண்ணின் குணத்தை உரித்து வைத்துவிட்டீர்கள்!!

இரசிகை said...

unga kaathaliyai yenakkum pidichirukku..