Friday, June 5, 2009

இதுவும் வரதட்சணை கொடுமை....?!


நின்றே போய்விட்டது எனது
நிச்சயதார்த்தமும் திருமணமும்

சாதகம் பாதகம் பார்த்து
சாதகப் பொருத்தமும் பார்த்து
'சரூராக' நடந்த நிச்சயதார்த்தம்
சட்டென நின்று போனது

வரதட்சணையென பெண்வீட்டாரிடம்
வைத்தஒரு கோரிக்கையால்
நட்டநடுக் கூடத்தில் நானே
காட்சிப்பொருளாக ஆகிப்போனேன்

புயலின் சுழல்மையத்தில் நான்
பரிதவித்துப்போய் இருக்கிறேன்
சுற்றிலும் சுழற்றி அடித்துகொண்டிருக்கிறது
வார்த்தைகள் சுடும் சூறாவளியாய்

"மாப்பு நல்லாத்தானே இருக்காரு ?
"மப்பா'' என்னன்னவோ சொல்லுதாரு !"

"நிச்சயத்துக்கு முன்னாடி பையனப்பத்தி
அக்கம்பக்கம் ஏதாவது விசாரீச்சீயளா?????"

"சம்பந்தம் இதெல்லாம் இனிமே
சரிப்பட்டு வராப்ல தெரியலியே !"

"தொடுப்பு எதையும் வச்சிருப்பான்யா !
குடியும் கூத்தையும் மறைச்சிருப்பான்யா !!"

"எதையோ ஒளிக்கிறாங்கடே !
தெசையத் திருப்புராங்கடே !!"

"கண்ணுல குறை இருக்குமோ ?
நெஞ்சில தடை இருக்குமோ ??"

"வீட்டுக்குள்ள ஏதோ வழுக்கல் இருக்கும்போல !
குடும்பத்துல ஏதோ சிக்கல் இருக்கும்போல !!"

சாட்டையாய் நாவினால் விளாசுகிறார்கள்
சாடையாய் அள்ளி வீசுகிறார்கள்

"@#$%^&*()
அட ஆண்டவனே !

அப்படி என்னதான் நான்
அதிகப்படியாய்க் கேட்டுவிட்டேன் !!
வரதட்சணை வேண்டாம் என்றதற்கேன்
வானம்வரைக் குதிக்கிறார்கள் ?!!!"

என்நிலை எனக்கு
இன்னும் புரியவில்லை...........?!?!?!

நண்பா உனக்கு ?

No comments: