Tuesday, May 26, 2009

இது உனக்கொரு (எனக்கும்) எச்சரிக்கை ...!


உறவாடிக் கெடுப்பவர்கள்
உன்னைச் சுற்றியே இருப்பார்கள்
உள்ளொன்று வைத்திருப்பார்கள்
உனக்காக உயிர்தருவதாய் நடிப்பார்கள்

குழி வெட்டிக் காத்திருப்பார்கள் - நீ
ஓய்வெடுக்க என்பார்கள்

வலை விரித்து காத்திருப்பார்கள் - நீ
தங்கிச் செல்ல என்பார்கள்

தூண்டிலிட்டுக் காத்திருப்பார்கள் - நீ
ஊஞ்சலாட என்பார்கள்

தடை உருவாக்கிக் காத்திருப்பார்கள் - நீ
நடை பயில என்பாகள்


தேரதை இழுத்து நடுத்
தெருவினிலில் விடுத்து அதை
வேடிக்கை பார்ப்பதையே தன்
வாடிக்கையாய்க் கொண்டோர் இவர்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
வஞ்சகரின் வாய்ப் பேச்சில்
வழுக்கி விழுந்து விடாதே
வாழ்க்கை இழந்து விடாதே

நல்லோரை அவர் தம்
நடத்தையால் தெரிந்துகொள்
உண்மையை உனது உள்
உணர்வால் புரிந்துகொள்

வஞ்சினம் கொண்டு நீ
வஞ்சகம் கொன்று நீ
வாழ்க்கையில் வென்று நீ
வழிகாட்டியாய் நின்று விடு

No comments: