Monday, July 6, 2009

காட்டுக்குள் காத்திருக்கும் கரும்புலி ....!


06-07-09
--------

காட்டுக்குள்...
--------------
வரிப்புலியென்றால்
வலுவிருக்கும் உறுதியில்,
உயிர் எடுக்கும் காட்டில்
உறவுகாக்க மறைந்திருந்து - எதிரியின்
உயிர் பறிக்கும் இறுதியில்

கரும்புலியென்றால்
கடும் சினமிருக்கும் உறுதியில்,
உயிர் கொடுத்துப் போரில்
உறவு காக்க வெளியே வந்து - எதிரியின்
உயிர் பறிக்கும் சடுதியில்

நீண்ட போராட்டத்தின் இறுக்கத்தில்
உண்டான மயக்கத்தின் கிரக்கத்தில்
சோர்ந்து கிடக்கும் புலியைச்சுற்றி

சேர்த்து மூடிவிட்டனர் வலைக்குள் - கொண்டாட
சார்ந்தோர் மூழ்கிவிட்டனர் போதைக்குள்

ஆம்.,

சிலந்திகளால் பிண்ணி முடிக்கப்பட
சிலுசிலு பகட்டு வலைகள் அவை

புலி விழித்து மீண்டும்
வாலசைந்தாலே சிதைந்துபோகும் - அந்த
வலுவில்லாத வலைகளும்
வலைபிண்ணிய சிலந்திகளும்

கரும்புக்குக் கூலியா? என
கானகம் அழித்துச் செல்லும்
காடையருக்குத் தெரியாது - உள்ளே
கரும்புலி காத்திருக்கும் சேதி

2 comments:

தேவன் மாயம் said...

கரும்புக்குக் கூலியா? என
கானகம் அழித்துச் செல்லும்
காடையருக்குத் தெரியாது - உள்ளே
கரும்புலி காத்திருக்கும் சேதி //

உங்கள் கவிதைகளை என் தளத்தில் போடலாம்போல.......... மிக சிறப்பாக உள்ளது.

Anonymous said...

supperb annan.....arumai...ungal vaakku palikkum...raavan rajhkumar-jaffna