Thursday, July 16, 2009

குடந்தையின் கதறல் கேட்டதா கோட்டைக்கு ..?


16-07-09
குடந்தை குழந்தைகளுக்கு
ஒரு கண்ணீர் அஞ்சலி :
:

"தளிரிலேயே கருகி
...காணாமப் போன பயிரே ,
உன்னாலேயே உருகி
...கறையுது என்னோட உயிரே....,

நாள் பார்த்து ஒலகம்
...ஒருநாளு மட்டும் நெனைக்கயிலே.,
நாதியத்த நாங்க இங்க
...ஒருநொடிகூட மறக்கலியே..

கண்ணுல தண்ணியும்
...கொஞ்சம்கூட கொறையலியே.,
கண்ணீரால நனைஞ்சும்
...நெஞ்சுக் கொதிப்பும் அடங்கலியே..

என்ன செய்யப்போறேன்
...நீ இல்லாமல் தெரியலியே.,
எப்படி இருக்கப்போறேன்
...இனிமேலும் புரியலியே.. "

குடந்தைத் தாயின் கதறல்
...இப்பவாவது கேட்கிறதா கோட்டைக்கு ?
சட்டதிட்டமெல்லாம் நாளைக்கு
...மீண்டும் வந்திருமா விற்பனைக்கு ??

1 comment:

jothi said...

நெஞ்செல்லாம் வலி, காதெல்லாம் அந்த அலரல் அரவம்.,.. வலிக்கிறது மெய்