Thursday, July 2, 2009

தேவதை அவளைக் காண......


காலம் கனிந்து விட்டது
கனவு பலித்து விட்டது
ஒலியின் வீச்சையும் தாண்டி
ஒளியின் வேகத்தையும் தூண்டி

காற்றாய் விரைந்து கொண்டிருக்கிறேன் !

கண்ணாமூச்சி ஆடிய அவளை
கனவில் கண்ட கனவு அவளை
கண்முன்னால் காணப் போகிறேன்
கைகளில் தூக்கிக் கொஞ்சப் போகிறேன்

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

குட்டிச் சுவற்றில் அமர்ந்துகொண்டு
வெட்டியாய் சுற்றி வந்தவனை
பொறுப்பு அதனை உணர்த்தி - என்னை
திருத்த வந்த தேவதை அவள்

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

சல்லிப் பயலென என்னை
சொல்லிக் கழித்த அனைவரும் வந்து
வெட்கி மகுடம் சூட்டி - என்னை
தட்டிக் கொடுக்க வைக்கப்போகிறாள் அவள்

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

திண்ணையின் ஓரம் வந்தாலே
திட்டி ஒதுக்கும் சொந்தங்களிடையே
நடுக் கூடத்தில் அமரவைத்து -எனக்கு
நல்மரியாதை வாங்கித் தரப்போகிறாள் அவள்

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

உனது மூச்சுபடக் காத்திருக்கிறது
எனது நுரையீரல் மூச்சடக்கி !
உனது மூச்சாசுடக் காத்திருக்கிறது
எனது முழுஉடல் சூடாகி !!

இதோ வந்து கொண்டிருக்கிறேன் !

தங்கையவள் தாயாகி இருக்கிறாள் - என்னைத்
தாய்மாமன் ஆக்கி இருக்கிறாள் - எனது
மருமகள் அவளைப் பார்க்க மாமன் - புள்ளி
மானாக விரைந்து கொண்டிருக்கிறேன்

இதோ........!!!!!

4 comments:

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் said...

i

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் said...

தங்கைமேல் உள்ள பாசம் தெள்ளெனத் தெரிகிறது...
அவள் குழந்தைமேல் காட்டப்போகும் அன்பும்
தீபமாய்ச் சுடர்கிறது!

அருமை !

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Anonymous said...

paasamellaam sari seervarisai yanka?

arul.k. Robert