Monday, January 17, 2011

முப்பாலுடன் முதல்காலை..........(1)

திருவள்ளுவர் தினம் :

அய்யனின் குறளுக்கு விளக்கம் தரும் இந்தப் ’பையனின்’ விளக்கக் குறள்களைப் பதியும் (பாதியில் விட்ட ) இந்த இழையை மீண்டும் தொடர இதைவிடச் சிறந்த நாள் இருக்க முடியாது என நினைக்கிறேன் :) ...

இடையில் ஏற்பட்ட இடைவெளிக்காக மன்னிக்க வேண்டுகிறேன் .


அறம் / அதிகாரம் : 2 வான்மழை:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் [02:07]
விளக்கக் குறள் :

பெரும்கடலும் வற்றும்;நீர் மேகமாய் மாறி
வரும்மாரி நின்றுபோ னால்


பொருள் / அதிகாரம் : 40 கல்வி :

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில் [40:04]

விளக்கக் குறள் :

மகிழப் பழகுதல்; நெஞ்சம் நெகிழ

விலகுதல் சான்றோர் இயல்பு


இன்பம் / அதிகாரம் : 110 குறிப்பறிதல் :

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும். [110:05]

விளக்கக் குறள் :

குறிக்கோள் எதுவுமின்றி; கண்சுருக்கி என்னைக்

குறிவைத்துப் பார்ப்பாள் மகிழ்ந்து



தொடரும்......கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன்......

No comments: