Wednesday, January 5, 2011

ஓவியமாய் ஒருத்(தீ)தி :

அழகுக் கவிதைகள்..

அதீதக் கற்பனைகள்..

சிறுசிறு சீண்டல்கள்..

திடீர் தீண்டல்கள்...கலந்த

அற்புதக் கலவையிலிருந்து

எனதுவிரல் தூரிகையால்

வண்ணம் எடுத்துத்

தீட்டத் துவங்குகிறேன் நான்.....


சின்னச் சிணுங்கல்கள்..

செல்ல மிரட்டல்கள்..

தள்ளி உதறுதல்..

வெட்டி விலகுதல்...என

தூரிகையின் வண்ணங்களுக்கு ஏற்ப

நொடிக்கொரு ஓவியமாய்

மாறிக்கொண்டிருக்கிறாள் அவள்........


[நன்றி :கரு: இயற்கை சிவம்]

1 comment:

Unknown said...

தீ இனிது.