Tuesday, January 18, 2011

முப்பாலுடன் முதல்காலை..........(2)

அறம் /

அதிகாரம் 03 : நீத்தார் பெருமை [துறவின் பெருமை]

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து [03:04]

விளக்கக் குறள் :

உறுதியென்னும் அங்குசத்தால் ஐம்புலனும் காப்போர்
துறவென்னும் ஞாலத்து வித்து


பொருள் /

அதிகாரம் 041 : கல்லாமை

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று [41:07]

விளக்கக் குறள் :

கண்கவர் தோற்றமும் குன்றிய நுண்ணறிவும்

என்றென்றும் மண்பொம்மை போன்று


இன்பம் /

அதிகாரம் 111 : புணர்ச்சி மகிழ்தல் [ கூடல் இன்பம் ]

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள். [111:06]

விளக்கக் குறள் :

தழுவும் பொழுதெல்லாம் புத்துயிர் தந்திடும்;

அமுதத்தால் ஆனதவள் தோள்


தொடரும்......கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன்......
--

என்றும் அன்புடன் -- துரை --1 (66).gif

No comments: