Monday, January 10, 2011

யுகம் கடந்தும் இருக்கிறான் உயிரோடு..........




உள்காமம் மறைத்து

கிடைக்கும் இடைவெளியில்

வசரகதியில் அத்துமீறி

கண்ட பாகங்களில் பாய்ந்து

மேய்ந்து திரும்பும் கண்கள்....


குறுநகைப் போர்வையுள்

குதறும் வாய்ப்புக்காக

மறைந்து காத்திருக்கும்

வெறிகொண்ட பற்கள்....


நம்பவைக்கும் நோக்கில்

நாசுக்காய் வலைவீசி

எண்ணியதை சாதிக்கும்

வண்ணம் பூசிய வார்த்தைகள்....


தம்மில் சிறியோரை

தலை நிமிரவிடாது

தட்டியபடியே இருக்க

பரபரக்கும் கைகள்.....


ம்ம்ம்..............


யுகங்கள் கடந்தும்

ஆழ்மனதின் அடியில்

அடர்இருளின் மடியில்

தற்பொழுதும் உயிரோடு

மிச்சமிருக்கத்தான் செய்கிறது....

அந்த.......

கற்கால மனிதனின் எச்சம்...........

.

No comments: