Saturday, November 29, 2008

நாங்கள் இந்தியர்கள்.


"எங்கிருந்தோ வந்த எவனோ
என்னென்னவோ செஞ்சிட்டுப்போக
ஒன்னா மண்ணா இருந்தவங்க எல்லாம்
தாயாப் புள்ளயா பழகினவங்க எல்லாம்
தள்ளிவச்சு பாக்க ஆரமிச்சிட்டாங்களே

பத்துப் பைத்தியக்காரங்க
புத்திக்கெட்டு செஞ்சவேலைக்கு
பல லெச்சம் பேரு வாழ்க்கை இங்க
பத்திகிடுமோன்னு பயமா இருக்கே

சுட்டுக் கொன்னது எல்லாம்
சொந்த சகோதரன் தான்னு
சொல் புத்திக்குத் தெரியலின்னாலும்
சொய புத்திக்கும் புரியலியா

என்னத்த சாதிக்க இப்படி
எடுபட்டுப் போயி திரியரானுவளோ
இன்னும் யார வாழவைக்க இப்படி
இருக்கரவங்கள அழிக்கிறானுவளோ

தன்னக் கப்பாத்திக்கப் பெரிசுங்க
உன்ன உசுப்பேத்தி உடுதாங்க
உண்ம தெரியாம நீயும் இப்படி
நேந்து வுட்ட மாதிரியே திரியரியே

அமரிக்காவுல செஞ்சுப்புட்டு அந்த
ஆப்கானிஸ்தானயே அழிச்ச மாதிரி
இந்தியாவுல செஞ்சுப்புட்டு இப்போ
எந்தக் குடிய கெடுக்கப்போரியோ

இந்தியாதானேன்னு எகத்தாளமா
இங்கே வந்து மோதிட்டியே
எங்களுகுள்ளேயே அடிச்சுகிட்டாலும்
எதிரின்னு வெளியே இருந்து வந்துட்டா
எவனா இருந்தாலும் சரிதான்

ஒண்ணுபோல சேந்து நாங்க
ஒரு பயலகூட விடாம
ஏன்னு கேக்க நாதியில்லாம
ஏறி மிதிச்சிப் போட்டுட்டு
எங்கபாட்டுக்குப் போய்கிட்டேயிருப்போம்".

Friday, November 28, 2008

கள்வனா?,காதலனா?,...


குமரிப் பெண் அவள்
குடியிருக்கும் குட்டிக்
குளுகுளு குடில்

மோசமான வானிலை வெளியே
லேசாகத் திறந்திருக்கிறது சன்னல்
தனியே இருக்கிறாள் அவள்
தள்ளியே இருக்கிறது மற்ற அறைகள்

வேலி தாண்டி உள்ளே வந்து
சன்னல் வழியே மெல்ல நுழைந்து
அக்கம் அக்கம் பார்த்து
அவள் பக்கம் வந்து

யாரிடமும் பயம் இல்லாமல்
எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல்
அவளிடம் கூட அனுமதி கேட்க்காமல்
அவள் கன்னத்தில் முத்தமிட்டு
அங்கேயே அடிவாங்கி
அப்போதே சாகும்
அந்த அப்பாவி
.
.
.
கொசு

Tuesday, November 25, 2008

நண்பனுக்கு ஒரு கடிதம்...


அன்பு நண்பன் இளங்கோவனே
அன்பு செலுத்த புது நாய்க்குட்டி தேடும்
இனிய அன்பனே
இன்றும் என்றும் நீ
இளம் கோ வாகவே
இருக்க விரும்புகிறேன்
இருக்கவேண்டும் நம் நட்பும்
இளமையாகவே
இதுபோல இனிமையாகவே

கவனிக்க....!

நீடிக்கும் நட்புக்குத் தடை போட
ஆர்ப்பரிக்கும் அன்புக்கு அணை கட்ட
படை திரட்டி வந்திருக்கிறார்கள்
பல திட்டம் தீட்டி இருக்கிறார்கள்
போட்டிகள் பலவும் வைத்திருக்கிறார்கள்

அவர்கள் வென்றால்
நட்புக்கு நிரந்தரத் தடையாம்
அவர்கள் வீழ்ந்தால்
நான் வெல்வேன்
நாம் வெல்வோம்
நம் நட்பு வெல்லும்
அந்தத்த் தடைக்குத் தான்
இனிமேல் என்றும் தடை

சில எளியக் கேள்விகளை
அவர்கள் முன்
எடுத்து வைத்திருக்கிறேன்
சரம் சரமாய்த் தொடுத்திருக்கிறேன்

"தொலைவில் தெரிகிறதே
தொடு வானம்,
அதை சீக்கிரம்
தொட்டு வா பார்க்கலாம் ! "

துரத்திக் கொண்டு போய் இருக்கிறார்கள்

"தூரத்தில் இணைகிறதே
தண்டவாளம்,
அது சேரும்
புள்ளீயின் தூரம்
இங்கிருந்து அளந்து வா பார்க்கலாம் !"

அளந்து கொண்டு போய் இருக்கிறார்கள்

"பெரியது எது?
புவியின் ஈர்ப்பு விசையா?
பூவின் ஈர்ப்பு விசையா?
புவியின் ஈர்ப்பு வென்றிருந்தால்
பூவிலிருந்து காய் வீழ்ந்திருக்கும் .
காய் இல்லையெனில் கனி இல்லை,
நீ இல்லை நான் இல்லை,
இப்போது சொல்,
எது பெரியது ?
அறிந்து வா பார்க்கலாம் !"

மரத்தின் கீழ் அமர்ந்து
மேல் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

"பயங்கர அழகு:
கொஞ்சம் கூடுதல்:
ரொம்ப குறைச்சல்:
எதிர் எதிர்ச் சொற்கள்
ஒன்றாய் கூடி
ஒரே அர்த்தம் தரும்
வார்த்தைகள் இன்னும்
பத்து கொண்டு வா பார்க்கலாம் !"

பல திசைகளுக்கும் பறந்து போய் இருக்கிறார்கள்

எனக்குத் தெரியும்
அவர்களில் யாரும்
திரும்பவேப் போவதில்லை

உனக்குத் தெரியும்
இதோ நான்
வந்து கொண்டிருக்கிறேன்
அந்த அழகான
புது நாய்க் குட்டியாக.....

என்னவள்.....


அவள்....
மரணத்தை விடக் கொடியது
அவளின் பிரிவு
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு யுகமாய்க் கழியும்

அவள்....
சொர்க்கத்தை விட சிறந்தது
அவளின் நினைவு
ஒரு யுக நேரமும்
சிறு மணித் துளியாய் கரையும்

அவள்....
இசையை விட இனியது
அவளின் காலடி ஓசை
என்னருகே கேட்கும்போது
அந்த உலகமே என்னச் சுற்றும்

அவள்....
ஊஞ்சலையும் மிஞ்சியது
அவளின் கருவிழியின் அசைவு
நினைத்தவுடன் தூக்கம் என்னைத்
தூக்கிக்கொண்டு தாலாட்டும்

அவள்...
கடவுளையும் தாண்டியது
அவளின் கவனிப்பின் அளவு
காயம் பட்ட போதும் என்னை
கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றும்

அவள்....
சுவாசத்தை விட அவசியமானது
அவளின் அளவில்லாத பாசம்
மனது உடைந்த நேரத்திலும் என்னை
மயிலிறகாய் வருடி விடும்

அவள்....
என்னவள்.....
என் அம்மா.......

Sunday, November 23, 2008

வயசுக் கோளாறு !!


அந்தி சாயும் வேளையில்
அந்தப் பெட்டிக்கடையின் மறைவில்
ஆனந்த அதிர்ச்சிக்காக
என்னவளின் பார்வைக்காக
எந்தன் தேவதையின் வருகைக்காக
நாளெல்லாம் பார்த்ததுநிற்பேன்

காற்றில் படபடத்து
கண்களுக்கு வலை வீசும்
பளபளப்புக் கூந்தல் பார்த்தவுடன் என்
பாதம் வானத்திலே மிதக்குமே

பட்டுச் சேலை பரபரக்க
பட்டுப்பூச்சியாய் மிதந்துவரும்
பாவையின் அழகு பார்க்க
பத்துநாளானாலும் பாதையிலேயே
பட்டினியாய்க் காத்து இருப்பேனே

ஓரவிழிப் பார்வையின்
ஒரு கண் அசைவிற்காக
ஒன்றல்ல,இரண்டல்ல
ஒன்பது நாளானாலும்
ஓரமாகவே காத்துக் கிடப்பேனே

ஆயிரம் பேருக்கு நடுவில்
அவள் இருந்தாலும் அந்த அறிவுள்ள
சுண்டுவிரல் அசைவினில் எனக்கு
சுத்தமாய் ஆயிரம் அர்த்தங்கள் புரிந்ததே

மணந்தால் மகாதேவி என்று வீராப்பு பேசி
மறுத்துப்பேசியோரை எல்லாம் ஏசி
சொந்தங்களின் சொல்லை மீறி
சொந்தமாக்கிக் கொண்டேனே அவளை ! !

இன்று.........

கதிரவனின் ஒளி பரவும் நேரத்தில்
கைதியைப்போல கட்டிலின் ஒரத்தில்
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியோடு
என்னவள் பார்வைக்காக
எட்டு மணியிலிருந்து காத்திருக்கிறேன்

பலவண்ணம் ஏற்ற ஏதுவாய்
பதப்படுத்தப்பட்ட பரட்டைக் கூந்தலுடன்
படுக்கையிலிருந்து எழுந்து என்னிடம்
பகல் காப்பிக் கேட்பவளைப் பார்த்து
கலங்கிப் போய் இருக்கிறேன்

பகல் பொழுது முழுவதும்
இரவு ஆடையிலிருந்து வெளியேராமல்
அங்கி போட்ட சாமி போல
தூங்கித் தூங்கி விழும்போதெல்லாம்
அந்தநாள் நினைவில்
ஏங்கியபடி இருக்கிறேன்

ஓரமாகவே இருந்து பார்த்தவனுக்கு
நேராகப் பார்த்தவுடன்தானே தெரிந்தது
அவளது பார்வையே ஒருமாதிரியாய்
ஓரமாகத்தான் இருக்குமென்று
பரிதவித்துப் போய் இருக்கிறேன்

ஒன்றல்ல இரண்டல்ல
ஒன்பது முறை விளக்கினாலும்
ஒன்று கூட புரிவதில்லை
பட்டயப் படிப்பு முடிக்கவே இன்னும்
பத்துப் பாடம் பாக்கியாம்
தெரிந்ததிலிருந்து இதயம்
தடுமாறிப்போய் இருக்கிறேன்

"மணந்தால் மகாதேவி என்று வீராப்பு பேசி
மறுத்துப் பேசியோரை எல்லாம் ஏசி
சொந்த்ங்களின் சொல்லை மீறி
நானாகவேத் தான் போய் மாட்டிக்கிட்டேனா??????"

Friday, November 21, 2008

கேள்வியும் பதிலும் ..?!


கேட்க்கும் கேள்விகளுக்கெல்லாம்
கவனமாய் வந்து விழுகின்றன பதில்கள்

"கூடிக்கொண்டே போகிறதே விலைவாசி" என்றால்
கேரளாவை விட குறைச்சல் என்கிறார்கள்

"பேருந்துக்கட்டணம் அதிகம்" என்றால்
பஞ்சாபில் பாதிதான் என்கிறார்கள்

"மின்கட்டணம் கூடுதல்" என்றால்
மிசோரத்தில் முக்கால் வாசிதான் என்கிறார்கள்

"ராத்திரியெல்லாம் மின்தடை" என்றால்
ராஜஸ்தானில் மின்சாரமே இல்லை என்கிறார்கள்

எந்தக்கேள்வி கேட்டாலும்
இந்தியாவின் பெயரைச் சொல்லி தப்பிக்கிறார்கள்

ஆனாலும் இந்தக் கேள்விக்கு மட்டும்
அவர்களிடம் இருந்து பதிலே இல்லை

"ஒருவேளையாவது கஞ்சி
ஒழுங்காய் குடிக்கவேண்டும் இங்கே
ஒருவழியாவது சொல்லுங்கள்" என்றால்
விடை தெரியாமல் முழிக்கிறார்கள்
விழி பிதுங்கி நிற்க்கிறார்கள்

ஐந்தாண்டு என்று இருப்பதை
அவ்வப்போது என மாற்றிவிட்டால்
அந்தக் கேள்விக்கான விடைகள்
அவ்வப்போதே கிடத்துவிடும்!

Thursday, November 20, 2008

தனிக் குடித்தனத்தில்.....


திருமணம் முடிந்து
இருமனம் இணையும்
தேனிலவும் தாண்டியது
தவிர்க்கவே முடியாத அந்த
தனிக்குடித்தனமும் ஆரம்பமானது

எனக்கு அவளைப் பற்றி
எல்லாம் தெரிந்துவிட்டது
என்ற நினைப்பில் மண் விழுந்தது
எதிர்பாராமல் ஒருநாள்
எனக்கு அந்த உண்மை தெரிந்தது

அவளுக்கு எண்ணை பிடிக்கவில்லை!

அன்றுமுதல் எனக்கு உறக்கமில்லை
அனுதினமும் இதனால் வந்ததுதொல்லை
எவ்வளவோ சொல்லியும் புரியவில்லை
என்ன செய்யவேண்டும் தெரியவில்லை

பிரச்சினையை முடிக்க முடியாததால்
பாதிப்பின்றி முடிவெடுக்கத் தெரியாததால்
விட்டுக்கொடுக்கவும் திடமில்லாததால்
எதிர்த்துப்பேசவும் மனமில்லாததால்

எனக்கும் எண்ணை பிடிக்காமல் போனது!!

எங்களுக்கு வேறு வழியே இல்லை
இப்படியே தொடர மனமும் இல்லை
ஒன்றாய் உட்க்கார்ந்து பேசினோம்
ஒருமனதாய் முடிவு செய்தோம்
.
.
.
.
.
.
.
.
.
.
எண்ணை இல்லாமல்
தோசை சுட்டு சாப்பிட்டோம்.!!!

Wednesday, November 19, 2008

கண் கெட்டபின்...?


பாலர் பருவம்
பள்ளிப் பாடங்கள் எல்லாம்
பலாச்சுளை போல இனித்தது
ஆசிரியர் எல்லோரும்
ஆண்டவன் போலத் தெரிந்தனர்

அப்போது தோன்றியது
"அதிகம் படிக்க வேண்டும்"

கல்லூரி வாழ்க்கை
கண்முன்னே புதிய களம்
கண்காணிப்பு இல்லாத கானகம்
கட்டுப்பாடு இல்லாத பரந்த உலகம்
பேராசிரியர் எல்லோரும்
பேராபத்தானவராய்த் தெரிந்தனர்

வெளியாகிறதா புதிய திரைப்படம்
வேண்டுமே முதல் வரிசையில் இடம்
எடுத்துவைப்போம் கோரிக்கைகளை
எடுத்துக்கொள்வோம் விடுமுறையை

ஆகா அனுபவித்தோம் வாழ்க்கையை
அந்த இடத்தில் படிப்பா?
அது பற்றி தோன்றவே இல்லை!

அடுத்தக் கட்டம்
அங்கே பள்ளி இல்லை,கல்லூரி இல்லை
ஆனாலும் அனுபவப் பாடம்
அதுவாகவே கொஞ்சமாய்ப் புரிந்தது

புத்தியில் எதுவோ
புரிந்ததுபோலத் தெரிந்தது
"எதற்கும் கொஞ்சம் படித்திருக்கலாமோ?"

தற்போது கலவரமாய் நிலவரம்
தலை தப்பியே ஆக வேண்டும்
ஒரு வேலை இருந்தால் தான்
ஒருவேளை உணவுக்கு உத்திரவாதம்

கண் திறந்தார் கடவுள்
கிடைத்தது கதவு திறந்துவிடும் வேலை

முதல் நாள் வேலை
முதல் கதவு திறக்கிறேன்
முதலாளியாய் வந்தவர்
கல்லூரியில் எனக்கு
மூன்றாண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து
முறையாய் படித்து முடித்த
மூன்றாவது தெரு முத்து சாமி

கண்கள் குளமாகிறது
"கண்டிப்பாய் படித்திருக்கவேண்டும்"

Tuesday, November 18, 2008

திட்டம் பல தீட்டி....


குடும்பங்கள் சில கூட்டாய் சேர்ந்து
நெடுநாள் திட்டம் பல தீட்டி
இல்லாத தாத்தாவுக்கு
இதய நோய் என்று

அலுவலகத்தில் காரணம் சொல்லி
அவசர விடுப்பு எழுதிக் கொடுத்து
குதூகலமாய்க் கூடிக் கிளம்பினோம்
குடும்ப,இன்பச் சுற்றுலா

ஆரவாரமாய்க் குதித்து
அடித்துப்பிடித்து இடம் போட்டு
ஆசுவாசமாய் மூச்சு விட்டு
அமர்க்களமாய்க் கால் நீட்டி
அரைத்தூக்கம் தூங்கி எழுந்தபின்

கையில் பட்டது
பையில் உள்ள சாவி.

உள் மனதில் ஒரு சாத்தான்
உரக்கக் கத்தத் தொடங்கியது

"எதையோ மறந்துவிட்டாய்"

மறக்க வாய்ப்பே இல்லையே!
மறுமுறை சரிபார்த்து விடலாமா?

நகைப்பெட்டியைப் பூட்டி சாவியை
அஞ்சறைப்பெட்டிக்குள் வைத்தாகிவிட்டதே!

எரிவாயு உருளையை துண்டித்து
எரிந்த விளக்குகளை அணைத்தாகிவிட்டதே!

தண்ணீர்க் குழாயை மூடி
திறந்த பின்கதவை மூடியாகிவிட்டதே!

சுற்றுலா செல்வதை
சுற்றி உள்ளவர்களுக்கெல்லாம்
பெறுமையோடு சொல்லி
வயிற்றெரிச்சலைக் கிளப்பி

வீடு வந்து மறக்காமல்
சாவி எடுத்து பையில்
பத்திரமாய்ப் போட்டு
பதட்டமே இல்லாமல் கிளம்பி வந்தோமே!

ஆகா!! வீட்டைப் பூட்டினோமா?????

சுற்றுலா தொடங்கிய
முதல் நாளே என்
தலை சுற்றத் தொடங்கி விட்டது.

அவசியம் வேணும் வாரிசு அரசியல் !


இன்று சனநாயகநாட்டில்
இந்தத் தலைவர்களின்
வாரிசாகப் பிறந்ததாலேயே
வந்து சேர்ந்துவிடும் அந்த
அடுத்தத் தலைமைப் பதவியும்
அதற்கான முதன்மைத் தகுதியும்

இன்று அரசைத் தலைவர்கள் ஆள
நாளை அவர்களின் வாரிசுகள் ஆள
அன்று அடிமை நாட்டில்
நின்று போராடிய

வீட்டிற்கு சேர்த்துவைக்க மறந்த
வாரிசுகளை உயர்த்திவிட மறுத்த
நாட்டின் விடுதலைக்கும்
நமக்கும் சேர்த்து உழைத்த
தன்னலமற்ற தலைவர்களின்

வீட்டில் பிறந்ததாலேயே
வாழ்க்கை இழந்து
வாழ வழி தேடி
பிச்சை எடுக்கும்
பரிதாப வாரிசுகளின் நிலை

எத்தனை பேர் அறிவோம்?
அவர்களின் அவல நிலை
அகற்ற ஆவன செய்வோம்!
அதற்கு ஆவனம் செய்வோம்!!

இந்த வாரிசு அரசியலைப் போற்றுவோம்!!!