
குமரிப் பெண் அவள்
குடியிருக்கும் குட்டிக்
குளுகுளு குடில்
மோசமான வானிலை வெளியே
லேசாகத் திறந்திருக்கிறது சன்னல்
தனியே இருக்கிறாள் அவள்
தள்ளியே இருக்கிறது மற்ற அறைகள்
வேலி தாண்டி உள்ளே வந்து
சன்னல் வழியே மெல்ல நுழைந்து
அக்கம் அக்கம் பார்த்து
அவள் பக்கம் வந்து
யாரிடமும் பயம் இல்லாமல்
எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல்
அவளிடம் கூட அனுமதி கேட்க்காமல்
அவள் கன்னத்தில் முத்தமிட்டு
அங்கேயே அடிவாங்கி
அப்போதே சாகும்
அந்த அப்பாவி
.
.
.
கொசு
No comments:
Post a Comment