Tuesday, November 18, 2008

அவசியம் வேணும் வாரிசு அரசியல் !


இன்று சனநாயகநாட்டில்
இந்தத் தலைவர்களின்
வாரிசாகப் பிறந்ததாலேயே
வந்து சேர்ந்துவிடும் அந்த
அடுத்தத் தலைமைப் பதவியும்
அதற்கான முதன்மைத் தகுதியும்

இன்று அரசைத் தலைவர்கள் ஆள
நாளை அவர்களின் வாரிசுகள் ஆள
அன்று அடிமை நாட்டில்
நின்று போராடிய

வீட்டிற்கு சேர்த்துவைக்க மறந்த
வாரிசுகளை உயர்த்திவிட மறுத்த
நாட்டின் விடுதலைக்கும்
நமக்கும் சேர்த்து உழைத்த
தன்னலமற்ற தலைவர்களின்

வீட்டில் பிறந்ததாலேயே
வாழ்க்கை இழந்து
வாழ வழி தேடி
பிச்சை எடுக்கும்
பரிதாப வாரிசுகளின் நிலை

எத்தனை பேர் அறிவோம்?
அவர்களின் அவல நிலை
அகற்ற ஆவன செய்வோம்!
அதற்கு ஆவனம் செய்வோம்!!

இந்த வாரிசு அரசியலைப் போற்றுவோம்!!!

No comments: