Saturday, November 29, 2008

நாங்கள் இந்தியர்கள்.


"எங்கிருந்தோ வந்த எவனோ
என்னென்னவோ செஞ்சிட்டுப்போக
ஒன்னா மண்ணா இருந்தவங்க எல்லாம்
தாயாப் புள்ளயா பழகினவங்க எல்லாம்
தள்ளிவச்சு பாக்க ஆரமிச்சிட்டாங்களே

பத்துப் பைத்தியக்காரங்க
புத்திக்கெட்டு செஞ்சவேலைக்கு
பல லெச்சம் பேரு வாழ்க்கை இங்க
பத்திகிடுமோன்னு பயமா இருக்கே

சுட்டுக் கொன்னது எல்லாம்
சொந்த சகோதரன் தான்னு
சொல் புத்திக்குத் தெரியலின்னாலும்
சொய புத்திக்கும் புரியலியா

என்னத்த சாதிக்க இப்படி
எடுபட்டுப் போயி திரியரானுவளோ
இன்னும் யார வாழவைக்க இப்படி
இருக்கரவங்கள அழிக்கிறானுவளோ

தன்னக் கப்பாத்திக்கப் பெரிசுங்க
உன்ன உசுப்பேத்தி உடுதாங்க
உண்ம தெரியாம நீயும் இப்படி
நேந்து வுட்ட மாதிரியே திரியரியே

அமரிக்காவுல செஞ்சுப்புட்டு அந்த
ஆப்கானிஸ்தானயே அழிச்ச மாதிரி
இந்தியாவுல செஞ்சுப்புட்டு இப்போ
எந்தக் குடிய கெடுக்கப்போரியோ

இந்தியாதானேன்னு எகத்தாளமா
இங்கே வந்து மோதிட்டியே
எங்களுகுள்ளேயே அடிச்சுகிட்டாலும்
எதிரின்னு வெளியே இருந்து வந்துட்டா
எவனா இருந்தாலும் சரிதான்

ஒண்ணுபோல சேந்து நாங்க
ஒரு பயலகூட விடாம
ஏன்னு கேக்க நாதியில்லாம
ஏறி மிதிச்சிப் போட்டுட்டு
எங்கபாட்டுக்குப் போய்கிட்டேயிருப்போம்".

No comments: