Tuesday, November 25, 2008

என்னவள்.....


அவள்....
மரணத்தை விடக் கொடியது
அவளின் பிரிவு
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு யுகமாய்க் கழியும்

அவள்....
சொர்க்கத்தை விட சிறந்தது
அவளின் நினைவு
ஒரு யுக நேரமும்
சிறு மணித் துளியாய் கரையும்

அவள்....
இசையை விட இனியது
அவளின் காலடி ஓசை
என்னருகே கேட்கும்போது
அந்த உலகமே என்னச் சுற்றும்

அவள்....
ஊஞ்சலையும் மிஞ்சியது
அவளின் கருவிழியின் அசைவு
நினைத்தவுடன் தூக்கம் என்னைத்
தூக்கிக்கொண்டு தாலாட்டும்

அவள்...
கடவுளையும் தாண்டியது
அவளின் கவனிப்பின் அளவு
காயம் பட்ட போதும் என்னை
கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றும்

அவள்....
சுவாசத்தை விட அவசியமானது
அவளின் அளவில்லாத பாசம்
மனது உடைந்த நேரத்திலும் என்னை
மயிலிறகாய் வருடி விடும்

அவள்....
என்னவள்.....
என் அம்மா.......

No comments: