Friday, November 21, 2008

கேள்வியும் பதிலும் ..?!


கேட்க்கும் கேள்விகளுக்கெல்லாம்
கவனமாய் வந்து விழுகின்றன பதில்கள்

"கூடிக்கொண்டே போகிறதே விலைவாசி" என்றால்
கேரளாவை விட குறைச்சல் என்கிறார்கள்

"பேருந்துக்கட்டணம் அதிகம்" என்றால்
பஞ்சாபில் பாதிதான் என்கிறார்கள்

"மின்கட்டணம் கூடுதல்" என்றால்
மிசோரத்தில் முக்கால் வாசிதான் என்கிறார்கள்

"ராத்திரியெல்லாம் மின்தடை" என்றால்
ராஜஸ்தானில் மின்சாரமே இல்லை என்கிறார்கள்

எந்தக்கேள்வி கேட்டாலும்
இந்தியாவின் பெயரைச் சொல்லி தப்பிக்கிறார்கள்

ஆனாலும் இந்தக் கேள்விக்கு மட்டும்
அவர்களிடம் இருந்து பதிலே இல்லை

"ஒருவேளையாவது கஞ்சி
ஒழுங்காய் குடிக்கவேண்டும் இங்கே
ஒருவழியாவது சொல்லுங்கள்" என்றால்
விடை தெரியாமல் முழிக்கிறார்கள்
விழி பிதுங்கி நிற்க்கிறார்கள்

ஐந்தாண்டு என்று இருப்பதை
அவ்வப்போது என மாற்றிவிட்டால்
அந்தக் கேள்விக்கான விடைகள்
அவ்வப்போதே கிடத்துவிடும்!

No comments: