Friday, May 1, 2009

அலையின் சீற்றமா?....



அழகுக் குழந்தைபோல
ஆர்ப்பாட்டம் செய்யாமல்
அமைதியாய் இருப்பவனை

விளையாடும் ஆசையோடு
வரிசையாய் அசைந்தாடி
விரும்பி வருபவனை

தரை தொட்டவுடன்
தலைகுனிந்து வெட்கி
திரும்பி ஓடுபவனை

ஏழைக்கு உதவுபவனை
எதிர்பார்ப்பு இல்லாதவனை
எதுவுமே தெரியாதவனை

ஏமாற்றித் தூண்டிவிட்டு
பிரமாண்டமாய் எழுப்பிவிட்டு
ஆர்பரிக்க வைத்துவிட்டு
ஏதேதோசொல்லி ஏவிவிட்டு
கரையும் தாண்ட வைத்துவிட்டு

எதுவுமே தெரியாததுபோல
நல்லவன்போல நாடகமாடி
நமுட்டுச் சிரிப்போடு
நடப்பதைப் கவனிக்கிறது
நயவஞ்சகக் காற்று

No comments: