
ஐயிரண்டு திங்களாய்
அன்னையுள் வசித்து
ஆழ்குள மீன்போல
அக்கிநீருள் சுவாசித்து
பரந்தஉலகில் நான்
பிறந்தநாளன்று தான்
கிடைத்தது எனக்கு முதல்
காற்றின் புதிய சுவாசம்
ஐநான்கு வருடமாய்
பத்தோடு பதினொன்றாய்
விறிந்த உலகில் பிடியின்றி
வீணே சுற்றித்திரிந்த நான்
வானத்து தேவதையவளை
வாழ்வின்வாசலில் சந்தித்த நாள்
அறிதாய் எதுவோ உணர்ந்தேன்
புதிதாய் மறுபடி பிறந்தேன்
வஞ்சிக்கொடி அவளை
நெஞ்சில் நினைக்கும் பொழுதினில்
திடுக்கென எனக்குள்
நொடிகொருமுறைப் பிறக்கிறேன்
பிறக்கும்போதெல்லாம் பறக்கிறேன்
பறக்கும்போதெல்லாம் கிடைக்கிறது
என் முதல்காதலின் புதிய சுவாசம்
No comments:
Post a Comment