Sunday, January 23, 2011

கற்போம் , கற்பிப்போம் : தமிழ் ..(1) குழப்பம் களைவோம்(ர்,ற்/ன்,ண்/ல்,ள்,ழ்)..!



அன்பின் உள்ளங்களே .,
இது எங்களைப் போன்ற ஆரம்பக்கட்ட / தமிழார்வமுள்ளவர்களுக்கு வரும் குழப்பம்தான் . எழுதிக் கொண்டே வரும்போது சந்தேகம் வரும் .

இங்கே

’ர வருமா? / ற வருமா?? ல வருமா? / ள வருமா?? / ழ வருமா???
ன வருமா? /ண வருமா??
இங்கே புள்ளி வச்ச எழுத்து வருமா ? வராதா ??’

அவ்வளவுதான் .எல்லாம் அதோடு நின்றுவிடும் . இதை சரி செய்து , குழப்பம் தீர்ப்பது எப்படி ?

-’’அதாவது.....இலக்கணப்படி....’’ என ஆரம்பித்தால் தெரிந்துகொள்ள ஆர்வம் / ஆசை இருப்போரும் நழுவி விடுகிறார்கள்

சரி , அவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும்படி சொல்லிப் பார்த்தால் ...?

ஒரு முயற்சிதானே ! செய்து பார்க்கலாம் . எப்படியும் சில எளிய (தம்ப் ரூல்) விதிமுறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும் . அதை இங்கே பதியுங்கள் . பலர் பயனடைவார்கள் . பலர் தெளிவடைவார்கள் .

நான் ஆரம்பித்து வைக்கிறேன் ...

ர், ற் : [ சின்ன ‘ர’ (ர்) ,பெரிய ’ற’ (ற்) ] :
1)தரும் , பெறும் :
தருபவர்களுக்கு பெரும்பாலும் தன்னிடமுள்ளதை பிறருக்குத்தர மனம் வராது . (90% பேர் )கொஞ்சமாகவே /சிறிதாகவே கொடுக்க நினைப்பார்கள் . எனவே ‘தரும்’ க்கு சின்னர’ போடுங்க

பிறரிடமிருந்து பெற நினைப்பவர்கள் பெரிதாகவே வாங்க நினைப்பார்கள் / எதிர் பார்ப்பார்கள் . எனவே ’பெறும்’க்கு பெரிய ’ற’ போடுங்க

2) சிறிய , பெரிய ;
இதில் ஒரு ஆர்வமூட்டும் முரண் பயன்படுத்திப் பாருங்க .
சிறிய’ வுக்கு பெரிய ற போடுங்க
’பெரிய’ வுக்கு சின்ன ர போடுங்க

[1, 2 லிருப்பது எடுத்துக்காட்டு . சொன்ன விதிகள் அவைசார்ந்த வார்த்தைகளுக்கும் சரியாக வரும் ]


3) அரிய, அறிய :

அரிய: அருமையான / அபூர்வமான / வித்தியாசமான

தனித்தன்மை வாய்ந்தவைகள் உலகில் குறைவாகவே இருக்கும்

-அதனால்சின்ன ’ர’ போடுங்க

அறிய: தெரிந்துகொள்ள / புரிந்துகொள்ள வேண்டியவை உலகில் நிறையவே உண்டு

--அதனால் பெரிய ’ற’ போடுங்க


ன்,ண் :

ன் பெரிய ’ற’வுக்கு முன்னாடி சின்ன ’ன’வரும் [எகா- கன்று ,என்று, அன்றோ ]

ண் ’ட’வுக்கு முன்னாடி பெரிய ’ண’ வரும் [எகா- வண்டி,அண்டா, கண்டனம்,உண்டி]


ல்,ள்,ழ்:

ருல் என முடியும் சொல் தமிழில் கிடையாது . ( ருகரத்தைத் தொடர்ந்து லகரம் வராது .) எனவே ரு வைத் தொடர்ந்து ல் வராது ...


( நன்றி ; கல்பட்டார்,வேந்தன் அய்யா)


2 comments:

அன்புடன் நான் said...

தெளிவு படுத்தியமைக்கு நன்றிங்கைய்யா.

தமிழ் said...

பகிர்வுக்கு நன்றிங்க‌