Monday, January 3, 2011

நேரான பாதையை விட்டு விலகியும்....

திரும்பிப் பார்க்கிறேன் :

நிதானமாய்ச் செல்லும்

நேரான பாதையைத் தவிர்த்து...

சுற்றிச் சுழலும்

மாற்றுப் பாதையைத் தேர்ந்து...


சீரற்ற வேகத்தில்

சரேலென வளைந்து...

இடமும் வலமுமாய்

திடீரென நுழைந்து...

குறுக்கும் நெடுக்குமாய்

வேகத்துடன் விரைந்து...

திகைக்கவைக்கும் திருப்பங்களுடன்

திசையெல்லாம் பயணித்து.........


முடியுமிடத்தில் இருந்து

திரும்பிப் பார்க்கிறேன்


அழகாய்

உருவாகி இருந்தது

கோலம் ஒன்று ............!

1 comment:

தமிழ்ச் செல்வன்ஜீ said...

விலகி ஒதுங்கி செல்லும் கோடுகள் கூட அழகான கவிதையாகி விட்டது,வாழ்த்துகள்!