Sunday, October 19, 2008

கலாம் !


மூழ்காதே உனக்குள்
முளைத்து வா வெளியே
புதிய உலகம் படைக்கலாம்

காத்திராமல் காலையில்
கிழக்கு நோக்கி நடந்து பார்
உலகின் முதல் சூரியன்
உனக்காக அங்கே காத்திருக்கலாம்

குட்டக் குட்டக் குனியாமல்
தடைப்பட்ட உரிமைகளை
தாழ்மையோடு கேட்டுப்பார்க்கலாம்

கிடைக்கவில்லையா கவலையில்லை
தலைநிமிர்த்தி தைரியமாய்
தடையுடைக்க போட்டுப்பார்க்கலாம்

அக்னிக்குஞ்சே உன் சிறகுகளை
அடக்கிவைக்காமல் விறித்து வா
முட்புதராய் மண்டிக்கிடக்கும்
மூட நம்பிக்கைகளை எரிக்கலாம்

கைபிடித்து அழைத்துச்செல்ல
நல்லவற்றை எடுத்துச்சொல்ல
தலைதட்டி நடத்திச்செல்ல
காத்திருக்கிறார் கலாம்

No comments: