Saturday, October 18, 2008

சன நாயகம்:உள்ளே-வெளியே


வெளி நாட்டில் 10 வட்டிக்கு
100 கோடி கடன் வாங்கும்
நம்ம நாடு

அடுத்த நாட்டில் வறுமையென்றால்
80கோடி வட்டியில்லாமல்
கடனாய் கொடுக்கும்

பக்கத்து நாட்டில் பஞ்சமென்றால்
40கோடி கேள்விகேட்க்காமல்
இனாமாய் கொடுக்கும்

இங்கே சொந்த வீட்டையும்
எங்க சொத்துப் பத்தையும்
அடமானமா வச்சு
அம்பதாயிரம் கடனாக் கேட்டா

ஆயிரம் கேள்வி கேட்டு
அங்கே இங்கே அலையவிட்டு
சரியான ஆளாப் பார்த்து
சாமீனு கொடுன்னு கேட்டு
புரியாத சட்டம்சொல்லி சுத்திவிட்டு
கடைசியில் தலைய சொரிஞ்சிகிட்டு
கை நீட்டுதே நம்மகிட்டயே

No comments: