Sunday, October 12, 2008

வருங்காலத் தூண்கள் ?


ஒரு ரூபாய் அரிசி வாங்க
பை தூக்கி ரேசனுக்குப் போனால்
கூடவே சேர்ந்து போகுது மானமே.

ஓப்பனிங் சோ பாக்க
முந்தா நாள் ராத்திரியிலிருந்து
வாசலில் வரிசையில் நின்றாலும்
டிக்கட் கிடைத்தால் தான் அனந்தமே.

மோரு வித்து அம்மா
சேத்து வச்ச காசில்
யாருக்கும் தெரியாமல்
கை வைக்கும் போது அது
தப்புன்னே தோணலியே

அந்த காசில் பீரு வாங்கி
எல்லோரும் சேந்து குடிக்கும்போது
கடைசியில் கொஞ்சம் குறையும்போது
கேவலமாய்த் தோணுதே

நெஞ்சுவலி அப்பாவுடன்
கொஞ்சநேரம் கூட இருந்து
மருந்துகொடுத்துப் பார்க்க
ஆறுதலாய் உக்காந்து பேச
கொஞ்சங்கூட நேரமில்லியே

வெளிநாட்டுத் தூதரக
வாசலில் நாக்கு வரள
விசாவுக்காக நாள்கணக்கில்
வரிசையில் நின்னாலும்
நேரம் போனதே தெரியலியே
காத்திருக்கும் உண்ர்வே வரலியே

என்ன ஆயிற்று நம்
வருங்காலத் தூண்களுக்கு?

No comments: