Friday, October 3, 2008

முடி இழந்த மன்னர்கள்


சிறுகச் சிறுகச் சேர்த்து
சிறகு பொத்தி பாதுகாத்து

உணர்வுகளால் கட்டிக்காத்து
உருவாக்கிய உலகிலிருந்து

உபயோகமில்லாப் பொருளாக
உறவுகளால் உதறப்பட்டு

வீதியில் விதியை நொந்து
கதிமுடிந்த பின்பும் எதிர்காலம் தேடி

போகும்திசை தெரியாமல்
போகிறர்கள் அந்த
போக்கத்தப் பெரியவர்கள்

No comments: