Tuesday, June 23, 2009

நல்லதொரு குடும்பம்...:)


ஒரேஒரு கேள்வி !
இருவேறு பதில்கள் ?

குழம்பிப்போய் நிற்கிறாள் குழந்தை
குழப்பிவிட்டவர்கள் பெற்றவர்கள்

'மனிதப் பிறப்பின் ரகசியம்' என்னவென்று
மனப்பாடம் செய்யவேண்டும் இன்று

அம்மாவிடம்
ஆசையாய் கேட்கிறாள்

"ஆண்டவன் படைத்தான்
ஆதமையும் ஏவாளையும்
மண்ணில் அவர்கள் உருவாக்கினர்
மனிதர்கள் நம் அனைவரையும்"


அப்பாவிடமும்
ஆர்வமாய்க் கேட்கிறாள்

"குரங்கிலிருந்து பிறந்தான்
கூடிக்காடுகளில் வாழ்ந்தான்
நாகரீகம் கற்றான்
நாட்டுக்குள் வந்தான்
தன்நலம் கற்றான்
தனித்தனியே வாழ்கிறான்"


தெளிவில்லாத பதில்களால்
தலை சுற்றுகிறது அவளுக்கு

அம்மாவை நாடுகிறாள் மீண்டும்
அப்பாவின் கூற்றைக் கூறுகிறாள்

ஒருநொடி தாமதிக்கவில்லை அம்மா
இரண்டடியில் தீர்வைச் சொல்லுகிறார்

"அவரும் சரியாய்தான் சொல்லியிருக்கிறார்-ஆனால்
அவரது 'குடும்பம்' பற்றி சொல்லியிருக்கிறார் !"


சந்தேகம் நீங்கி துள்ளியபடி - குழந்தை
சந்தோசமாய் விரைகிறாள் பள்ளிநாடி


நன்றி :கரு / கு.த.ந

No comments: