Friday, June 19, 2009

அருக்காணிக் காதல்...!



"நார் இல்லாமல் மலர் _ ஆரம் ஆகுமா ?
வேர் இல்லாமல் மரம் _ மலர் கொடுக்குமா ?
நீர் இல்லாமல் உரம் _மரம் சேருமா ?

நீர் இல்லாமல் வேர் _மரம் வளர்க்குமா ?
நீர் இல்லாமல் மோர் _தனியே இருக்குமா ?
நீர் இல்லாமல் பார் _தாகம் தணிக்குமா ?

நீர் தராமல் வானகம் _தூங்கி இருக்குமா ?
நீர் இல்லாமல் கானகம் _ஓங்கி வளருமா ?
நீர் இல்லாமல் என்காதல் _ .................... !!"



ஆகா சொல்லிப்புட்டேனே !!!!!!!!!!!!!!.............

அவசரத்தில சொல்லிபுட்டேனே !
அவருகிட்டேயே சொல்லிப்புட்டேனே !

என் காதல சொல்லிப்புட்டேனே !
எதிர்பாக்காம சொல்லிபுட்டேனே !

என் காதல் கண்டிருப்பாரோ - என்மேல்
எதிர்காதல் கொண்டிருப்பாரோ ?

ஆசையா இருக்கேன் நான் அவருமேலே !
அடக்க முடியுமா இனியும் என்னால ?

காத்திருக்கும் சேதியச் சொல்லுங்க அவுகளுக்கு
கோயில் கட்டியேக் கும்புடுதேன் உங்களுக்கு

No comments: