Monday, June 15, 2009

இணைப்பு இருந்தால் இல்லாள் விடுவாளா...!


"கண்ணு முன்னால நாங்க
கண்டுக்கவே இல்ல நீங்க
நாங்கஇங்க உன்னைத்தானே நம்பியுள்ளோம்
எங்கெங்கோ அலையுதே உன்னோட உள்ளம்"


'' இப்போ என்ன நடந்................''

''குத்துக்கல்லப் போல உக்காந்துகிட்டு
உத்தஉத்துப் எதையோப் பாத்துக்கிட்டு
இல்லாத ஆளுகிட்டே நாள்கணக்கா
நல்லாத்தான் பேசுதீங்க''


'' அப்படி எல்லாம் ஒன்...........''

''தன்னந்தனியா சிரிச்சுக்கிறீங்க
தனக்குள்ள என்னவோ பேசிக்கிறீங்க
இஞ்சிதின்னக் கொரங்காட்டம் இளிக்கிறீங்க
மஞ்சதெளிச்ச ஆடாட்டம் முழிக்கிறீங்க''


'' இல்லாதத எல்லாம் சொல்லக்..........''

''தொடுப்பு அதை விரைவிலேயே
எடுத்துவிட்டே ஆகணும் - அப்பத்தான்
அடுத்தவேலையப் போய்ப் பாப்பீங்க
எடுத்த வேலையயும் முடிப்பீங்க''


'' இதெல்லாம் ரொம்ப அதிக.........''

''இண்டர்நெட்டே வேணாம் நமக்கு
இன்றேவெட்டு வேணும் அதுக்கு
அது இருந்தா நாங்க எதுக்கு
எதுவேணும் இப்போ உமக்கு''


"...............?!?!?!?!................"

இதுஎப்படி இருக்கு நண்பா உனக்கு ?
இதுக்குத்தான் இந்தப்பாட்டு எனக்கு !
எதுசொன்னாலும் ஏறமாட்டேங்குதே
ஏறின கோவமும் இறங்கமாட்டேங்குதே

என்ன செஞ்சி சமாளிக்கலாம் ?
எது சொல்லி சமாதானப்படுத்தலாம் ?
பரிசா நகை எடுத்துப் கொடுக்கலாமா ?
பெரிசாக கதை எடுத்து விடலாமா ?

??????????????????????????????????????
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????????????????!
@#$%^&*()^%$ஃஃ***&(()))*&%!!#@$@@@#@!^

"படாதபாடு பட்டுக்கிட்டு இருக்கேன் இங்கே
படிச்சுப் போட்டு சிரிக்கிறீங்க அங்கே
கடவுள மாதிரித்தானே நீங்க
காப்பாத்த இங்க உடனே வாங்க

எங்கே இருந்து வாரீங்கன்னு
இங்கே வந்து சொல்லீராதீங்க
உங்களையும்தான் சேத்துத் தேடுறாங்க
தன்னால வாயக்கொடுத்து மாட்டீறாதீங்க"

No comments: