Monday, October 6, 2008

உங்களுக்காவது தெரியுமா?


முகம் கண்டு நேராக
ஒருமுறை பார்க்காதவள்,
நான் கடந்தவுடன்

கண் கொண்டு
எழுதிய கவிதைகள்
ஒரு ஆயிரம் என் முதுகில்.

படிக்க வழியில்லை
பரிதவிக்கிறேன்,
தெரிந்தால் சொல்லுங்களேன்
காத்திருக்கிறேன்.

2 comments:

cheena (சீனா) said...

முகம் காணாதவள் - கண்டும் காணாதவள் போல் இருப்பவள் - கடந்த உடன் ஆயிரம் கவிதை கண்களால் எழுதுபவள் - படிக்க இயலாது - அவர்கள் தான் நமது பெண்கள்

நல்ல கற்பனை - உண்மை - துரை

நல்வாழ்த்துகள்

இரசிகை said...

nallaayerukku..