Wednesday, June 10, 2009

சொன்னா நான் இருப்பேனா....!


அன்பே உருவான தலாய்லாமா
தன்னைக் காக்க தலைமறைவாய் இருக்கிறார்

அன்பைப் போதிக்கும் போப்பாண்டவர்
குண்டுதுளைக்காத வாகனத்தில் வருகிறார்

விடுதலைப் போராட்டத் தியாகி
விதியைநொந்து வீதியில் நடக்கிறார்

பொதுநலச் சேவை செய்பவர்
படிக்கட்டுப் பயணம் செய்கிறார்

கந்து வட்டி வசூலிப்பவர்
கல்வித் தந்தையாக இருக்கிறார்

கட்டைப் பஞ்சாயத்து செய்பவர்
கடவுள் போலவே காட்சி தருகிறார்

நல்லவன் நாணயமானவன் நாயாய்
நடுத்தெருவில் அலைகிறான்

தடி எடுத்தவன் எல்லாம்
தலைவனாகிக் கொண்டிருக்கிறான்

தட்டிக்கேட்கவேண்டிய இந்நாட்டு மன்னர்கள்
தட்டிக்கழித்துக் கொண்டே இருக்கிறார்கள்

"கடமை கண்ணியமுன்னு பாக்கிறவன்
கஞ்சிக்கே வழியில்லாம வாரான்

களவானிப்பயலுவ காலிப்பயலுவ
காப்பிக்குடிக்க கனடாவுக்கே போறான்

இதச் சொன்னதுக்கே உயிரு போயிரும்போல
இதுக்கும்மேல இன்னும் என்னாத்தச் சொல்ல

ஆத்தாடி அம்புட்டுதேன்
இப்போதைக்கு அம்புட்டுதேன் !"

1 comment:

உமா said...

உண்மை நேர்மை நியாயம் எல்லாம் செல்லாகாசுகளாய், இன்று இது தான் நடைமுறை. நல்ல சிந்தனை.