Monday, June 29, 2009

காதல் சா(சீ)க்காளன்...!


மெதுவாய் உயரும் மின்தூக்கியில்
மேல்தளத்துள் வெளியேறி வருகையில்
மேல்மூச்சு இறைக்கிறது எனக்கு ? - எங்கோ
மேடையில் படிஏறியிருப்பாள் அவள் !

குளுகுளுவென இருக்கும் எனது
குளிர்சாதன அறைக்குள்ளும் லேசாக
வியற்க ஆரம்பிக்கிறது எனக்கு ? - அங்கே
மின்தடையாய் இருக்கும் அவளிடத்தில் !

வாசனை மூக்கு துளைக்க
ரசனையோடு சாப்பிட அமர்ந்ததும்
பசி மறத்துப்போகிறது எனக்கு ? - முன்னமே
ருசியாய் சாப்பிட்டு முடித்திருப்பாள் அவள் !

இன்னும் வேலை மீதமிருக்க
இரவு கண் மூட நேரமிருக்க
கனவாய் வருகிறது எனக்கு ? - அப்போதே
நன்றாகத் தூங்கிப் போயிருப்பாள் அவள் !

பாதிகாலையில் முகம் கழுவாமல்
படுக்கையில் இருந்தபடியே சூடாய்
பானம் குடிக்கப்போகிறேன் ! - எப்படியும்
பல் விளக்கியிருப்பாள் அவள் !!

3 comments:

தேவன் மாயம் said...

கவிதை மன்னனுக்கு வாழ்த்துக்கள்!!

இளைய கவி said...

பட்டாசு கவிதை சாமி..

பாலா said...

nalla irukku bossssssssssss