Saturday, November 1, 2008

உண்மையைச் சொல்கிறேன்.


பூவில் தேன் உண்ட பட்டாம்பூச்சி
சிறகுகள் படபடக்க
விண் நோக்கிப் பறக்கையில்
அதன் வண்ணங்கள் சிதறி
சித்திரம் போல உதிர்கிறதே

கிழக்குச் சூரியனின்
காலைக் கதிரின்
வெளிச்சத்தில் உலகம்
நிமிடத்துக்கொரு நிறத்தில்
வானவில்லாய் தெரிகிறதே

விண்ணிலிருந்து விழும்
மழைத் தூறலின்
ஒவ்வொரு துளியிலும்
வெவ்வேறு வாசம் வீசுகிறதே

சுழற்றியடிக்கும் காற்றின்
சத்தத்தில் இருந்து
இதுவரை தெரியாத
மொழிகளின் அர்த்தங்கள்
பல எளிதாய் புரிகிறதே

ஆமாம் நண்பர்களே
அன்புத் தோழர்களே

நான் காதலிக்கப்படுகிறேன்

No comments: